Thursday, November 1, 2012

எம் நண்பன் இவன் தான் யாழ்.வாழ்வியலுடன் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள்



எம் எல்லோருடைய நண்பனும் பெரும்பாலும் எம்மைப் போன்று மனிதனாகத் தான் இருப்பான். வாயால் பேச முடியாவிட்டாலும் விலங்குகள் சிறந்த நட்பாக விளங்கியிருக்கின்றன. அதைப்போன்று நம் யாழ்ப்பாணத்தவருக்கு தோள்கொடுக்கும் நண்பனாக மோட்டார் சைக்கிள்கள் மாறிவருகின்றன.

Friday, August 3, 2012

மாறுபட்ட கருத்துக்களில் மாநகரசபை ஊழியர்கள்


யாழ் மாநகரசபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் துப்பரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எவ்விதமான பாதுகாப்புக் கருவிகளும் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறது இவர்களது பணி. எட்டு மணித்தியாலம் வரை தொடர்கிறது வேலை.

Thursday, August 2, 2012

எம் உலகிற்குள் யார் வருவீர்...!


சிறுவர்களது எண்ணங்கள், செய்கைகள் அவர்களுக்கு மட்டும் தான் சொந்தமானவை. தூர நின்று அவற்றை ரசித்து விட மட்டும் தான் எங்களால் முடியும். அதற்குள்ளே நுழைந்து பார்க்க சிறுவர்கள் அல்லவா அனுமதி கொடுக்க வேண்டும்.


நன்றியுடன் நாம்…


இந்திய மண் மிதித்துமே ஆரம்பித்த
வரவேற்பு
மாபெரும் அறிவுப்படலத்துடன் அன்புப்படலமாக
தெவிட்ட வைத்திருக்கின்றது
இன்று!

சென்னைப் பல்கலைக்கழக முத்துக்கள்
எமக்கு கிடைத்த பொன்முத்துக்கள்

ஈழத்தமிழருக்காக கர்நாடக மாநிலத்திலும் ஒரு குரல்



இலங்கையில் இப்போது யுத்தக்களரி முடிந்தும் உண்மையில் சமாதானம் நிலவுவதாக சொல்ல முடியாது. இப்போதும் தினம் தினம் என்ன நடக்குமோ என்று மக்கள் அச்சவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடத்தல்களும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அதிகளவில் நடக்கின்றன. பாதிக்கப்படுகின்ற மக்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் உரிமைக்குரல் எழும்பிக் கொண்டு தானிருக்கின்றன. அதிலும் தமிழர்களுக்காக உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமது குரல்களை எழுப்பியபடியே  இருக்கின்றார்கள்.

இனியென்ன தனிமை..!

எழுத்தாணி- 03

மரணத்தை தேடிச் செல்லும் உயிர்கள்


எழுத்தாணி- 03

யுத்தம் தந்த மனயுத்தம்


\\\\\

எழுத்தாணி- 03

கண்கொண்டு பாராயோ கீரிமலை நாதனே...!



கேடு கண்டால் நீ ஓடு...

Tuesday, June 19, 2012

கண்ணில் வழியும் வேதனை

வலிகளோடு ஏக்கங்களை சுமந்தபடி இருக்கின்றது மீள்குடியேறிய மக்கள் விழிகள்! சோந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததால் அப்பா என்ற ஒரு ஆறுதல். வேதனைகளை நெஞ்சுக்குள் மறைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். 

நாகர்கோவில் மேற்குப் பிரதேச மக்கள் கடந்த வருடம் யூலை மாதம் தம் சொந்த இடம் திரும்பியிருக்கின்றார்கள். அவ்விடத்திற்கு களப்பயிற்சிக்காக சென்ற போது ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன்.

சந்தியோ சூரியமதி! முப்பது வயதேயான குடும்பப் பெண். விழிகளில் சூரியனையும் காணவில்லை: சந்திரனையும் காணவில்லை. அமாவாசைக் காடாய் அச்சம் நிறைந்த விழிகளுடன் தன் வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் இறக்கி வைத்தார்.

எனது உலகு-(எண்ணங்கள் வழியே எழுந்த எதிர்பார்ப்புக்கள்)


முன்பள்ளி, ஆரம்பப் பாடசாலைகள் வழியாகச் சென்றாலே மழலைகளின் சங்கீத மொழிக்காக நெஞ்சத்தை பறக்க விட கால்கள் கெஞ்சும். அவர்களுடனேயே சேர்ந்து சுற்றும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்? நாம் காற்றாகி வானில் பறந்து விட மாட்டோமா!

Wednesday, February 1, 2012

பார்வை வழியே விழுந்த கலை

ஒரு செய்தியை புகைப்படத்தின் ஊடாக இலகுவாக தெரிவித்து விடலாம். ஆயிரம் எழுத்துக்கள் சொல்ல முடியாத செய்தியினை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். அந்த சக்தி புகைப்படத்திற்கு இருக்கின்றது.

மீள்குடியேறியும் தொழிலின்றித் தவிக்கும் நாகர்கோவில் மக்கள்

யுத்தம் தந்த வேதனை நெஞ்சின் ஓரமாக இருக்க சொந்த இடம் செல்வதே இடம்பெயர்ந்த மக்களது முக்கிய நோக்காக இருக்கின்றது. கண்ணிவெடிகள் அகற்றி வசிப்பதற்காக எப்போது தமது இடத்திற்கு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.
ஒவ்வொரு இடமாக மக்கள் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. இந்த வருடம் நடுப்பகுதியில் நாகர்கோவில் பிரதேச மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பி உள்ளனர். எனினும் இன்னமும் தம்முடைய வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.

எம் வாழ்வு தான் என்ன?

எம் வாழ்வு தான் என்ன?
எம் புருவ மத்தியில் 
சிந்தனை முடிச்சுக்கள்...

Friday, January 6, 2012

என் பயண அனுபவம் தந்த சுகமும் துக்கமும்…

கடந்த மாதம் தென்னிந்தியாவிற்கு ஊடகப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயணம் ஊடக அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டதாகும். ஓவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு அனுபவத்தை சொல்லிக் கொண்டே இருக்கும்.

தமிழனுக்கு விசை கொடுத்த தப்பு இசை

வேலை செய்த களைப்பை மறக்கும் கருவியாக அந்தக்கால மக்கள் ஆடல்பாடல்களை நம்பினர்;. அந்தக் காலத்திலெல்லாம் வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பொழுதுபோக்கு கருவிகள் இருந்ததில்லை. கடின உழைப்பும் ஓய்விற்கென கிராமியக்கலைகளுமே அவர்களது மூச்சாக இருந்தது.


மக்கள் பாதுகாப்பிற்காக பொலிசாரின் புதிய திட்டம்

அரியாலை கிழக்கு நாவலடிப் பிரதேச மக்கள் மீள்குடியேறி சுமார் ஒரு வருடமாகி விட்டது. இப்பிரதேச மக்களது பாதுகாப்பிற்காக பொலிஸ்பிரிவு ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இங்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக இருபது பேர் கொண்ட அமைதிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த அமைதிக்குழுவில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அங்கத்துவம் வகிக்கின்றார்கள். இங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்கின்றனர்.

Wednesday, January 4, 2012

குப்பைக் காடு நடுவே பூத்து நிற்கும் குடியிருப்பு…

சிங்காரச் சென்னை இந்திய நாட்டின் ஒரு பகுதி! இங்கு பல வர்க்க மக்கள் வசிக்கின்றார்கள் தினம் தினம் விமானத்தில் பறந்து கொண்டு இருப்பவர்கள் இங்கு தான் இருக்கின்றார்கள். விமானத்தை அருகே பார்த்தவனும் இங்கு தான் இருக்கின்றான். பணக்காரன் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்க ஏழை கணத்திற்கு கணம் வறுமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இச் சென்னையில் சேரிப்புறங்கள் நிறைந்து இருக்கின்றன. சேறும் சகதியுமான இப்பகுதியில் ஒன்றான பம்பிங்ரேசன் பகுதியைப் பற்றிப் பார்ப்போம்.


Tuesday, January 3, 2012

கொழும்பில் ஊடகப் பயிற்சிப் பயணம்

அனுபவங்கள் தான் மனிதனை செம்மையாக்குகின்றது. எம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் எம்மை தூக்கி நிறுத்துகின்றன. வெற்றி தோல்வியை சமதளத்தில் வைத்து எம்மையே பூர்த்தி செய்ய வைக்கின்றது.

நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் முழுநேர இதழியல் கற்கைநெறி பயிலும் மாணவி. பரீட்சை முடிந்தவுடனேயே எமக்கான உள்ளகப் பயிற்சிப் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தது.

‘ஒளிச் சமிக்ஞைகள்’ அற்ற காப்பற் வீதிகளால் ஏற்படும் விபத்துக்கள்

‘‘நேரமாகிப் போய்ட்டுது இன்டைக்கு எப்படியும் ஒபீஸில் பேச்சுத் தான் கேட்கப் போறேன். உந்த பாழாய்ப் போன றோட்டும் ஒரே நெரிசல். உதுக்குளால போய் வாறதை நினைக்கேக்கை..’’  பெரும்பாலான வீடுகளில் காலை வேளையில் இப்படித் தான் முணுமுணுப்பு!
    
அவசர பணிக்குப் போகிறவர்களுக்கும் சரி பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சரி பெருத்த தலையிடியாக இருக்கிறது இந்த போக்குவரத்து நெரிசல்!    

பிராந்தியப் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம்


நகைச்சுவை உணர்வினைத் தூண்டும் வகையில் வரையப்படுபவை கேலிச்சித்திரங்கள். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூட கேலிச்சித்திரங்கள் இலகுவில் உணர்த்தி விடுகின்றது.   
            
கேலிச்சித்திரங்கள் ஊடகங்களிலே குறிப்பாக பத்திரிகைத்துறையில் பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன. எனினும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்களோ தொடர் சித்திரப் படங்களோ பெரிதளவில் வெளிவருவதில்லை. 

“எங்களை எழுப்பினால் நாங்கள் எங்கே போவம்”…?


‘‘எங்களை எழுப்பினா நாங்க எங்க போவம் என்னோட படிக்கிற பிள்ளைகளை எல்லாம் பிரிய வேணும் என்னம்மா’’ என்று தனது தாயிடம் சிணுங்குகிறாள் கொக்குவில் இராமகிருஷ்ணாவில் படிக்கும் மாணவியொருத்தி!

யாழ்ப்பாணத்திற்கு தண்ட வாளம் போடப்படப் போகிறது; ரயில் வரப் போகிறது. குடாநாட்டு மக்கள் எல்லாரும் சந்தோசக் கடலில் நீந்த தண்டவாளத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பாளர்கள்  துன்பத்தில் இருக்கின்றனர்.

புகையிரத நிலையத்தை அண்டிய குடியிருப்புக்கள்

''பயிற்சி நிலைய வெளியீடுகளை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும்'' சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர்

கொழும்பு லேக்கவுஸ் நிறுவனத்தின் வார இதழான சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர் அனந்தபாலகிட்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்தார். திங்கட்கிழமை (18.04.2011) அன்று முழு நேரக் கற்கைநெறி மாணவர்களுடனான விசேட விரிவுரையும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. அப்போது ஊடக வளங்கள் பயிற்சி நிலைய மாணவர்களிற்கு அவரளித்த செவ்வி...


                    

இலத்திரனியல் வளர்ச்சி ஊடகத்துறையின் வரப்பிரசாதம்

காலம் போகின்ற வேகத்திலே உலகில் பற்பல முன்னேற்றகரமான சம்பவங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தி மனித வாழ்வில் உயிர் நாடியாகத் துடித்துக் கொண்டிருக்கும் இலத்திரனியல் துறையானது புரியும் விந்தைகளோ அதிகம்.