Tuesday, June 19, 2012

கண்ணில் வழியும் வேதனை

வலிகளோடு ஏக்கங்களை சுமந்தபடி இருக்கின்றது மீள்குடியேறிய மக்கள் விழிகள்! சோந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததால் அப்பா என்ற ஒரு ஆறுதல். வேதனைகளை நெஞ்சுக்குள் மறைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். 

நாகர்கோவில் மேற்குப் பிரதேச மக்கள் கடந்த வருடம் யூலை மாதம் தம் சொந்த இடம் திரும்பியிருக்கின்றார்கள். அவ்விடத்திற்கு களப்பயிற்சிக்காக சென்ற போது ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன்.

சந்தியோ சூரியமதி! முப்பது வயதேயான குடும்பப் பெண். விழிகளில் சூரியனையும் காணவில்லை: சந்திரனையும் காணவில்லை. அமாவாசைக் காடாய் அச்சம் நிறைந்த விழிகளுடன் தன் வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் இறக்கி வைத்தார்.

எனது உலகு-(எண்ணங்கள் வழியே எழுந்த எதிர்பார்ப்புக்கள்)


முன்பள்ளி, ஆரம்பப் பாடசாலைகள் வழியாகச் சென்றாலே மழலைகளின் சங்கீத மொழிக்காக நெஞ்சத்தை பறக்க விட கால்கள் கெஞ்சும். அவர்களுடனேயே சேர்ந்து சுற்றும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்? நாம் காற்றாகி வானில் பறந்து விட மாட்டோமா!