Wednesday, February 1, 2012

பார்வை வழியே விழுந்த கலை

ஒரு செய்தியை புகைப்படத்தின் ஊடாக இலகுவாக தெரிவித்து விடலாம். ஆயிரம் எழுத்துக்கள் சொல்ல முடியாத செய்தியினை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். அந்த சக்தி புகைப்படத்திற்கு இருக்கின்றது.

மீள்குடியேறியும் தொழிலின்றித் தவிக்கும் நாகர்கோவில் மக்கள்

யுத்தம் தந்த வேதனை நெஞ்சின் ஓரமாக இருக்க சொந்த இடம் செல்வதே இடம்பெயர்ந்த மக்களது முக்கிய நோக்காக இருக்கின்றது. கண்ணிவெடிகள் அகற்றி வசிப்பதற்காக எப்போது தமது இடத்திற்கு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.
ஒவ்வொரு இடமாக மக்கள் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. இந்த வருடம் நடுப்பகுதியில் நாகர்கோவில் பிரதேச மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பி உள்ளனர். எனினும் இன்னமும் தம்முடைய வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.

எம் வாழ்வு தான் என்ன?

எம் வாழ்வு தான் என்ன?
எம் புருவ மத்தியில் 
சிந்தனை முடிச்சுக்கள்...