Tuesday, January 3, 2012

பிராந்தியப் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம்


நகைச்சுவை உணர்வினைத் தூண்டும் வகையில் வரையப்படுபவை கேலிச்சித்திரங்கள். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூட கேலிச்சித்திரங்கள் இலகுவில் உணர்த்தி விடுகின்றது.   
            
கேலிச்சித்திரங்கள் ஊடகங்களிலே குறிப்பாக பத்திரிகைத்துறையில் பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன. எனினும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்களோ தொடர் சித்திரப் படங்களோ பெரிதளவில் வெளிவருவதில்லை. 

“எங்களை எழுப்பினால் நாங்கள் எங்கே போவம்”…?


‘‘எங்களை எழுப்பினா நாங்க எங்க போவம் என்னோட படிக்கிற பிள்ளைகளை எல்லாம் பிரிய வேணும் என்னம்மா’’ என்று தனது தாயிடம் சிணுங்குகிறாள் கொக்குவில் இராமகிருஷ்ணாவில் படிக்கும் மாணவியொருத்தி!

யாழ்ப்பாணத்திற்கு தண்ட வாளம் போடப்படப் போகிறது; ரயில் வரப் போகிறது. குடாநாட்டு மக்கள் எல்லாரும் சந்தோசக் கடலில் நீந்த தண்டவாளத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பாளர்கள்  துன்பத்தில் இருக்கின்றனர்.

புகையிரத நிலையத்தை அண்டிய குடியிருப்புக்கள்

''பயிற்சி நிலைய வெளியீடுகளை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும்'' சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர்

கொழும்பு லேக்கவுஸ் நிறுவனத்தின் வார இதழான சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர் அனந்தபாலகிட்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்தார். திங்கட்கிழமை (18.04.2011) அன்று முழு நேரக் கற்கைநெறி மாணவர்களுடனான விசேட விரிவுரையும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. அப்போது ஊடக வளங்கள் பயிற்சி நிலைய மாணவர்களிற்கு அவரளித்த செவ்வி...


                    

இலத்திரனியல் வளர்ச்சி ஊடகத்துறையின் வரப்பிரசாதம்

காலம் போகின்ற வேகத்திலே உலகில் பற்பல முன்னேற்றகரமான சம்பவங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தி மனித வாழ்வில் உயிர் நாடியாகத் துடித்துக் கொண்டிருக்கும் இலத்திரனியல் துறையானது புரியும் விந்தைகளோ அதிகம். 
                 

Wednesday, December 7, 2011

சொந்த வாழ்வு நோக்கிப் பயணிக்கும் தெல்லிப்பளை வாசிகள்- வீதிப் புனரமைப்பு


யூனியன் கல்லூரிக்கு முன்னர் உள்ள வீதி புனரமைக்கப்படுகின்றது.

சொந்த வாழ்க்கைக்கு தயாராகும் தெல்லிப்பளை வாழ் மக்கள்

தெல்லிப்பளை செல்வாபுரம்
யுத்தத்தின் கோரத்தால்
சொந்த மக்களின்றி வாடிய பயிர்!

இருபத்தொரு வருடங்கள் வேற்றுநிலப் புகலிடம்
சொந்த இடத்தின் காதலை புறந்தள்ளி
சொந்த உறவுகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்
யுத்தத்தால்...

யுத்தம் தந்த வடுக்கள்
அப்படியே நெஞ்சுக்குள் ஓரமாக இருக்க
இன்று சொந்தவீடு சேர்ந்த மகிழ்ச்சியில்
புதிதாக மனைகளை
எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Friday, November 11, 2011

வேதனையாகிப் போன அனுபவம்...

சேதி சொல்லும் பேனாக்கள் (தென்னிந்தியப் பயணப்பதிவு)





இந்தியா
எம் ஊடகப் பயணத்திற்காக
தெரிவு செய்த நாடு!


சென்னை மாநகரத்தில் ஆரம்பமானது
எம் பயணம்…