நகைச்சுவை உணர்வினைத் தூண்டும் வகையில் வரையப்படுபவை கேலிச்சித்திரங்கள். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூட கேலிச்சித்திரங்கள் இலகுவில் உணர்த்தி விடுகின்றது.
கேலிச்சித்திரங்கள் ஊடகங்களிலே குறிப்பாக பத்திரிகைத்துறையில் பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன. எனினும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்களோ தொடர் சித்திரப் படங்களோ பெரிதளவில் வெளிவருவதில்லை.

