யுத்தம் தந்த வேதனை நெஞ்சின் ஓரமாக இருக்க சொந்த இடம் செல்வதே இடம்பெயர்ந்த மக்களது முக்கிய நோக்காக இருக்கின்றது. கண்ணிவெடிகள் அகற்றி வசிப்பதற்காக எப்போது தமது இடத்திற்கு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.
ஒவ்வொரு இடமாக மக்கள் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. இந்த வருடம் நடுப்பகுதியில் நாகர்கோவில் பிரதேச மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பி உள்ளனர். எனினும் இன்னமும் தம்முடைய வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.
Wednesday, February 1, 2012
Friday, January 6, 2012
என் பயண அனுபவம் தந்த சுகமும் துக்கமும்…
கடந்த மாதம் தென்னிந்தியாவிற்கு ஊடகப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயணம் ஊடக அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டதாகும். ஓவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு அனுபவத்தை சொல்லிக் கொண்டே இருக்கும்.
தமிழனுக்கு விசை கொடுத்த தப்பு இசை
வேலை செய்த களைப்பை மறக்கும் கருவியாக அந்தக்கால மக்கள் ஆடல்பாடல்களை நம்பினர்;. அந்தக் காலத்திலெல்லாம் வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பொழுதுபோக்கு கருவிகள் இருந்ததில்லை. கடின உழைப்பும் ஓய்விற்கென கிராமியக்கலைகளுமே அவர்களது மூச்சாக இருந்தது.
மக்கள் பாதுகாப்பிற்காக பொலிசாரின் புதிய திட்டம்
அரியாலை கிழக்கு நாவலடிப் பிரதேச மக்கள் மீள்குடியேறி சுமார் ஒரு வருடமாகி விட்டது. இப்பிரதேச மக்களது பாதுகாப்பிற்காக பொலிஸ்பிரிவு ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இங்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக இருபது பேர் கொண்ட அமைதிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த அமைதிக்குழுவில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அங்கத்துவம் வகிக்கின்றார்கள். இங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்கின்றனர்.
இங்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக இருபது பேர் கொண்ட அமைதிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த அமைதிக்குழுவில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அங்கத்துவம் வகிக்கின்றார்கள். இங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்கின்றனர்.
Wednesday, January 4, 2012
குப்பைக் காடு நடுவே பூத்து நிற்கும் குடியிருப்பு…
சிங்காரச் சென்னை இந்திய நாட்டின் ஒரு பகுதி! இங்கு பல வர்க்க மக்கள் வசிக்கின்றார்கள் தினம் தினம் விமானத்தில் பறந்து கொண்டு இருப்பவர்கள் இங்கு தான் இருக்கின்றார்கள். விமானத்தை அருகே பார்த்தவனும் இங்கு தான் இருக்கின்றான். பணக்காரன் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்க ஏழை கணத்திற்கு கணம் வறுமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இச் சென்னையில் சேரிப்புறங்கள் நிறைந்து இருக்கின்றன. சேறும் சகதியுமான இப்பகுதியில் ஒன்றான பம்பிங்ரேசன் பகுதியைப் பற்றிப் பார்ப்போம்.
Tuesday, January 3, 2012
கொழும்பில் ஊடகப் பயிற்சிப் பயணம்
அனுபவங்கள் தான் மனிதனை செம்மையாக்குகின்றது. எம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் எம்மை தூக்கி நிறுத்துகின்றன. வெற்றி தோல்வியை சமதளத்தில் வைத்து எம்மையே பூர்த்தி செய்ய வைக்கின்றது.
நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் முழுநேர இதழியல் கற்கைநெறி பயிலும் மாணவி. பரீட்சை முடிந்தவுடனேயே எமக்கான உள்ளகப் பயிற்சிப் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தது.
நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் முழுநேர இதழியல் கற்கைநெறி பயிலும் மாணவி. பரீட்சை முடிந்தவுடனேயே எமக்கான உள்ளகப் பயிற்சிப் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தது.
Subscribe to:
Posts (Atom)

