அரியாலை கிழக்கு நாவலடிப் பிரதேச மக்கள் மீள்குடியேறி சுமார் ஒரு வருடமாகி விட்டது. இப்பிரதேச மக்களது பாதுகாப்பிற்காக பொலிஸ்பிரிவு ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இங்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக இருபது பேர் கொண்ட அமைதிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த அமைதிக்குழுவில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அங்கத்துவம் வகிக்கின்றார்கள். இங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்கின்றனர்.