Thursday, July 14, 2011

தொலைபேசியைக் குத்திய இணையம் மீண்டும் அதைப் பாதுகாத்து மாணவர்களை குத்திக் கிழிக்கிறதா?

யாரது யாரது சொல்லாமல் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது சமீபத்தில் எல்லோரின் முணுமுணுப்பையும் தாண்டி ரிங்ரோனாக மாறிப் போன பாடல். திரைப்படங்கள் வர்த்தகக ரீதியானவை. அதன் போக்கு அப்படித் தான் என்ற வரைமுறை இருக்கிறது. அதற்குள்ளே நாம் ஏன் போக வேண்டும்.  எல்லாருடைய கையிலும் தொலைபேசி பள்ளி மாணவர்களிடையே மீள முடியாத போதைப் பழக்கம் என்று பலரும் சொல்கிறார்கள்!

Tuesday, July 5, 2011

போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் பண்ணை வீதிப் புனரமைப்பு பணிகள்

யாழ்ப்பாணத்திலிருந்து வேலணைக்கு செல்லும் தரைமார்க்கம் பண்ணை வீதி தான். அதனூடாகவே மக்கள்  தமது போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டும். அவ்வீதியின் அகலமாக்கல் புனரமைப்பு பணிகள் பல மாதங்களாக இடம்பெற்று வருகின்றன.



Tuesday, June 28, 2011

பயில் நிலம் - 01கடிவாளம் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய (mrtc) முழுநேர டிப்ளோமா மாணவர்களின் பயில் நிலம் - 01|இன் பயிற்சி இதழான ~கடிவாளம்| வெளியீட்டு விழா ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மண்டபத்தில் எதிர்வரும் 29.06.2011 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

தலா ஜந்து மணவர்கள் தனித்தனிக் குழுவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பத்திரிகையை தயரித்துள்ளது. இவ்வாறு கடிவாளம் 01 முதல் 08 வரை எட்டு இதழ்கள் வெளியிடப்பட உள்ளது.

இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரன் கலந்து கொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.




எனது 3ஆம் குழு மாணவர் படைப்பு
இக் கடிவாளம் இதழ்
வாழ்த்துக்கள் வேண்டி நிற்கின்றோம்...

Friday, April 29, 2011

செல்வக்கவி

   என் தாயின் பாதை எதுவோ




















அம்மா உனைப் போலொரு அம்மா எனக்கில்லை
அமுதே உனைப் போலொரு அமுதில்லை
நான் நடந்தேன் நீ புரண்டாய்
நான் சிரித்தேன் நீ சிரித்தாய்
நான் அழுதேதன் நீ துவண்டாய்
இந்த ஜென்மஜனனம் எதற்காக
எனக்காகவென்று நீ சொல்லு

Wednesday, April 13, 2011

செல்வ ஆக்கங்கள்

அங்காடித்தெரு படம் என் கண்ணோட்டத்தில்...
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நிறையப் படங்கள் வருகிறது. ஆனால் மக்கள் நெஞசில் ஒரு சிலதே நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. அப்படி ஒரு படம் அங்காடித்தெரு. எப்போதோ வெளிவந்து விட்டாலும் சமீபத்தில் தான் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழ் சினிமா எப்போதும் எடுக்கும் கதைச் சக்கரத்தில் சுழலாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள்.

Tuesday, April 12, 2011

செல்வ ஆக்கங்கள்

Nanook of the north என் பார்வையில்...

இத்திரைப்படம் இக்ளு என்கிற பனிக்கட்டி வீடுகளில் வாழும் எக்ஸிமோவர் இன மக்களுடைய் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுகிறது. அவர்களினுடைய நாளாந் வாழ்க்கை முறை உணவுப் பழக்கவழங்கள் வாழ்வியல் அமைப்பு முறை என்பன இப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
படத்தில் பேச்சுக்கள் இன்றி வெறும் சைகைகளே மடடுமே காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு கட்டமும் ஸ்கிரீனில் எழுத்துக்களாக போடப்படுவது விளங்கிக் கொள்ள முடிகிறது.