வெள்ளத்திற்கு ஆசை வந்து விட்டது. அணை போட முடியாத ஆவல் அதற்கு! மனிதன் கால் தடங்கள் பதிந்த வீதிகளில் எல்லாம் தன் உடல் உராய வேண்டுமென்று. மனிதனின் ஆசையை அஸ்திவாரம் போட்டுத் தடுக்க முயலலாம். ஆனால் இயற்கையின் கொண்டாட்டத்திற்கு போடத் தான் முடியுமா தடை? தன்னைப் பார்த்து மனிதர் போற்றியது போதாதாம். வீதிகளில் தவழ்ந்தால் அவர்கள் தன்னைப் பார்த்து குதூகலிப்பார்கள் என நினைத்துக் கொண்டு அவர்களுடைய தூற்றல் பாவினையே தவமாய் கேட்டு விட்டது.
Wednesday, February 23, 2011
யாழில் சகோதர மொழியில் பெயர்ப்பலகைகளின் ஆதிக்கம்... புரியாது திணறும் மக்கள்
யாழ்ப்பாணத்தில் போர் முடிந்த காலப்பகுதியிலிருந்து பெருமளவான வணிக நிறுவனங்களும் தனியார் வங்கிகளும் படையெடுத்துள்ளன. பல வியாபார நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தை தமது வர்த்தகத்திற்கான மிகப் பெரிய களத்தை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையுடன் மையமிட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)